Monday, August 3, 2009

என் வீட்டில்...

குடியிருப்போரை குறை கூறினார்
வீட்டின் உரிமையாளர்,
'வீட்டை வைத்துக்கொள்ளத்தெரியவில்லையே;
எங்கள் வீட்டைப் பாருங்கள்! அங்கே,
சுவர்களில் வண்ணக்கிறுக்கல்கள் இல்லை;
சன்னல்களில் கீறல்கள் இல்லை;
கதவுகள் கிறீச்சிடவில்லை;
கண்ணாடிகள் உடையவில்லை;
தரையில் பிசுபிசுப்பில்லை;
தண்ணீர்க்குழாய்கள் கசியவில்லை!'
உரைத்தவை யாவும் உண்மையே;
சொல்லத்தவறிய உண்மையொன்றும்
ஒளிந்திருந்தது உள்ளே.
ஆம்;
அவ்விடம் குழந்தைகளும் இல்லை!

No comments:

Post a Comment